
காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பி வழக்கம்போல, இன்றும் தோல்வியைச் சுமந்தபடிதான் வந்திருக்கிறேன்.
நெஞ்சில் கனக்கும் துயரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என் முயற்சி பலிதமாகாததால் மனதில் ஏமாற்றமும் விரக்தியுமே நிறைந்துபோயுள்ளது. வயிறுவேறு புகைந்து பசியெடுக்கிறது.
வீட்டில் ஆறஅமர இருந்து வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப் பலநாட்களாகிவிட்டன.
பசியை மறந்து தூக்கம் கெட்டுப்போன நாட்களே எங்களுக்கு மீதியாகித் தொடர்கின்றன.
எத்தனை நாட்கள்தான் இப்படி....?
தொடர்ந்து வாசிக்க |
|