சிறுகதைகள்

 


வானத்திலே நட்சத்திரங்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் மாணிக்கவாசகர் இருளை வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பனங்கூடலும இருளுக்குள்ளே முற்றாகவே மூடிக்கிடந்தது. சுவர்க் கோழியின் சத்தம் அந்த விரிந்த மௌனத்துக்கிடையே காதுகளை ஓங்கி அறைந்து எரிச்சலூட்டிற்று. அது எதிரே தெரிந்தால் பெருவிரலால் நசிக்க வேண்டும் போல மனதினுள்ளே மூர்க்கம் கொதித்தது. பிறகு தன்னை அமைதிக்குக் கொண்டுவர முயன்றான். பத்மாவின் முகமும் குரலும் மனவெளியில் தோன்றி ஒலித்தன. கனிவான முகம், நேசம் இழைந்த குரல், பத்மா அடிக்கடி சொல்லுவாள்: “எதுக்கும் அடிக்கடி கடுமையாகக் கோபப்படாதேங்க….”

தொடர்ந்து வாசிக்க


 


 

 

 

 

 



 

 
eXTReMe Tracker